தவறான சிகிச்சையால் பெண் மூளைச்சாவு - மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
ஈரோட்டில் தவறான சிகிச்சையால் பெண் மூளைச்சாவு அடைந்ததாக கூறி பெண்ணின் உறவினர்கள் தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் பவானி தேவபுரத்தை சேர்ந்த ஞான சகுந்தலா என்பவருக்கு, கடந்த 45 நாட்களுக்கு முன் ஈரோடு அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனியார் மருத்துவனையில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அன்று முதல் வாந்தி, மயக்கம் என அவதிப்பட்டு வந்ததால், மீண்டும் அதே தனியார் மருத்துவமனையில் சகுந்தலா சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அய்யாவு என்ற மருத்துவரின் அறிவுரைப்படி அவருக்கு இரண்டு ஊசிகள் போடப்பட்ட நிலையில், திடீரென வாயில் நுரை தள்ளியுள்ளது. இதனால் மேல் சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துமனைக்கு கொண்டு சென்ற போது, சகுந்தலா மூளைச்சாவு அடைந்துவிட்டது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி மருத்துவமனையை பூட்டினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
Next Story