பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது

சேலம் ஓமலூரில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டு பேருந்து ஒட்டுனரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது
x
சேலம் ஓமலூரில் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஏறிய 2 வாலிபர்களிடம் நடத்துனர் மார்க்கண்டேயன், டிக்கெட் வாங்குமாறு கேட்டுள்ளார். ஆனால் டிக்கெட் வாங்க மறுத்து அவர்கள் நடத்துனரிடம் தகாறில் ஈடுபட்டதை அடுத்து ஓட்டுனர் சக்திவேல் அவர்களை பேருந்தில் இருந்து இறக்கி  விட்டதாக தெரிகிறது.  இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மற்றொரு நண்பருடன் சேர்ந்து பைக்கில் துரத்தி சென்று பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்ததோடு ஒட்டுனர் சக்திவேலை தாக்கியதாக தெரிகிறது. இதைக்கண்ட பயணிகள் வாலிபர்களூக்கு தர்ம அடி கொடுத்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் காயமடைந்த சக்திவேலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் இரு வாலிபர்களை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். தலைமறைவான அஜீத் என்ற வாலிபரை தேடி  வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்