அதிமுக கூட்டத்தில் சலசலப்பு - மேடையில் வாக்குவாதம் செய்த பிரமுகர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் மேடையிலே வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
அதிமுக கூட்டத்தில் சலசலப்பு - மேடையில் வாக்குவாதம் செய்த பிரமுகர்
x
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அதிமுக வேட்பாளர் அறிமுக விழா நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தூசி.மோகன், அதிமுக பிரமுகர்கள் பெயரை குறிப்பிட்டு வரவேற்றார். அப்போது, திடீரென மேடைக்கு வந்த அதிமுக பிரமுகர் ஒருவர், தன் பெயரை ஏன் குறிப்பிடவில்லை என கூறி வாக்குவாத‌த்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து  அந்த அதிமுக பிரமுகர் பெயரை மேடையில் கூறி, சக நிர்வாகிகள் அவரை சமாதானம் செய்துவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்