பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு

உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு
x
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள திட்டா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபாகரன்  மனைவி கனகா, வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். நள்ளிரவு ஒரு மணி அளவில் அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில்,  அதிகாலையில் கனகா உயிரிழந்துள்ளார்.  அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி கனகாவின் கணவர் பிரபாகரன் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு உடலை வாங்க மாட்டோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பாகுதியில் பரபரபப்பு  ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார் கனகா இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்