தாராபுரம் : 200 டெட்டனேட்டர்கள் பறிமுதல் - இருவரிடம் விசாரணை

தாராபுரம் அருகே ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட 200 டெட்டனேட்டர்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தாராபுரம் : 200 டெட்டனேட்டர்கள் பறிமுதல் - இருவரிடம் விசாரணை
x
தாராபுரம் அருகே ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட 200 டெட்டனேட்டர்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள எரகாம்பட்டி பிரிவில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த ஜீப்பை மறித்து சோதனை செய்த போது டெட்டனேட்டர்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாகனத்தில் வந்த இருவரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். தாராபுரம் பகுதியில் நடைபெறும் நான்குவழி சாலை பணிக்காக டெட்டனேட்டர்கள் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. 

Next Story

மேலும் செய்திகள்