ஆரணி : காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் திருட்டு - போலீஸ் அதிர்ச்சி

காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் ஆரணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆரணி : காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் திருட்டு - போலீஸ் அதிர்ச்சி
x
காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் ஆரணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சுற்றியுள்ள பகுதிகளில் மணல் திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளதால், மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் பைபாஸ் சாலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மணல் கடத்தி வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த டிராக்டரை நேற்று இரவு மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். போலீஸ் பாதுகாப்பில் இருந்த டிராக்டர் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளதுடன், மாயமான டிராக்டரை தேடும் பணியை  போலீசார் தீவிரப் படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்துக்கு பொதுமக்கள் விவசாய சங்கத்தினர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்