அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் வெற்றிபெற களப்பணி : த.மா.கா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

தேர்தலின் போது பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் வெற்றிபெற களப்பணி : த.மா.கா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
x
தேர்தலின் போது பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுசிந்திர குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற களப்பணி ஆற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து அன்றாட பிழைப்பிற்கும், வணிகத்திற்கும், கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்வதைவிட்டு விட்டு, தேர்தலுக்கான பண நடமாட்டத்தை மட்டும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்