சாலையில் விழுந்த நண்பரை காப்பாற்ற சென்றவர் பலி

சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை
சாலையில் விழுந்த நண்பரை காப்பாற்ற சென்றவர் பலி
x
சீர்காழி அருகேயுள்ள நந்தியநல்லூர் கிராமத்தை சேர்ந்த பீமாராவ் ராம்ஜி என்பவர் தனது நண்பர் விஜயகுமாருடன் 2  சக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அப்போது வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த விஜயகுமார் எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். வாகனம் சிறிது தூரம் சென்ற பிறகே இதனை அறிந்த பீமாராவ் வாகனத்தை உடனடியாக நிறுத்திவிட்டு, விஜயகுமாரை தூக்குவதற்காக ஓடிவந்துள்ளார். அப்போது 
அந்த வழியே சென்ற வாகனம் பீமாராவ் மீது மோதிவிட்டு சென்றுள்ளது. அதில் சம்பவ பீமாராவ் உயிரிழந்தார். இந்தநிலையில் சாலையில் விழுந்த விஜயகுமார் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில், பீமாராவ் ராம்ஜி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்