பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு - சிபிசிஐடி விசாரிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு...
வழக்கை சரியாக விசாரிக்காத கொடைக்கானல் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளருக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு.
கொடைக்கானலில் தனது மனைவியை ஜெயசீலன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி, சாஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, புகார் அளித்து 24 நாட்களுக்கு பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறையாக விசாரித்திருந்தால் இப்படி நிகழ்ந்திருக்காது என்றும் எனவே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவதாக உத்தரவிட்டனர். மேலும், வழக்கை சரியாக விசாரிக்காத கொடைக்கானல் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
Next Story