பரபரப்பான சாலையில் இளைஞரை தாக்கும் கும்பல் - வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சாலையில், இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் சர‌மாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
பரபரப்பான சாலையில் இளைஞரை தாக்கும் கும்பல் - வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்
x
பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்திருக்கும் சாலையில், நின்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்குகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளபோதும், அங்கிருந்த யாரும் இளைஞரை காப்பாற்றவோ, சண்டையை தடுக்கவோ முன்வர வில்லை என  கூறப்படுகிறது. இதுகுறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், யாரும் புகார் தெரிவிக்காத‌தால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்