50 சவரன் நகை கொள்ளை அடித்த வழக்கில் 2 பேர் கைது

சென்னை வளசரவாக்கம்,ஸ்ரீலட்சுமி நகரை சேர்ந்தவர் பத்மநாபன், கடந்தவாரம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அரக்கோணத்தில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.
50 சவரன் நகை கொள்ளை அடித்த வழக்கில் 2 பேர் கைது
x
சென்னை   வளசரவாக்கம்,ஸ்ரீலட்சுமி நகரை சேர்ந்தவர் பத்மநாபன்,  கடந்த வாரம்  வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அரக்கோணத்தில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். நேற்று வீடு திரும்பிய நிலையில் பத்மநாபன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 50 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையனின் உருவத்தை வைத்து விசாரணை செய்தபோது, சக்கரபாணி நகரில் தங்கியிருந்த மதுரையை சேர்ந்த சிவராஜன், தருண் தான் கொள்ளையர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இருவரிடம் நடத்திய விசாரணையில் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதும், மதுரை அகதிகள் முகாமில் இருந்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 85 சவரன் நகைகளை மீட்டதுடன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்