மக்களவை தேர்தல் - களையிழந்து காணப்படும் புதுக்கோட்டை

புதுக்கோட்டை மட்டும் களை இழந்து காணப்படுகிறது
மக்களவை தேர்தல் - களையிழந்து காணப்படும் புதுக்கோட்டை
x
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, பல மாவட்டங்கள் பரபரப்பாக காணப்படும் நிலையில், புதுக்கோட்டை மட்டும் களை இழந்து காணப்படுகிறது.2004இல் தொகுதி மறுசீரமைப்பின் போது, புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி நீக்கப்பட்டு, அதன் 6 சட்டமன்றத் தொகுதிகள் திருச்சி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 4 மக்களவை தொகுதிகளுடன் இணைக்கப்பட்டது.இதனால், அந்த மாவட்டத்தில் உள்ள அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் மாவட்ட அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.புதுக்கோட்டை மாவட்ட சட்டமன்ற தொகுதிகள் இணைக்கப்பட்ட 4 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக, திமுக இடையே நேரடி போட்டி இல்லாதது போன்ற காரணங்களால் புதுக்கோட்டை மாவட்டம் களை இழந்து காணப்படுவதாக கூறப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்