பேஸ்புக் மூலம் 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் கண்டுபிடிப்பு
கடலூர் மாவட்டம் கோதண்டவிளாகம் கிராமத்தை சேர்ந்த விவேக் என்பவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார்.
கடலூர் மாவட்டம் கோதண்டவிளாகம் கிராமத்தை சேர்ந்த விவேக் என்பவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விவேக்கை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் விவேக் பேஸ்புக்கில் இருப்பதை அறிந்த போலீசார், அவர் திருப்பதியில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருவதை கண்டுபிடித்தனர். விவேக்கை அழைத்து வந்து அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
Next Story