வேட்பாளர் அறிமுக கூட்டத்தை புறக்கணித்த தேமுதிக, பாமக
ஆரணியில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை தேமுதிக, பாமக புறக்கணித்தனர்.
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக தற்போதைய எம்பியான செஞ்சி சேவல் ஏழுமலை மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஆரணியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, தமிழ்மாநில காங்கிரஸ் மற்றும் புதிய நீதி கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஆனால் முறையான அழைப்பு இல்லாத காரணத்தினால் தேமுதிக மற்றும் பாமகவை சேர்ந்தவர்கள் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை புறக்கணித்தனர்.
Next Story