பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் கைது

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் கைது
x
தனக்கன்குளம் கிராமத்தில் வசித்து வரும் ஒன்பதாம் வகுப்பு பமாணவி, தினமும் ஆட்டோ மூலம் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, ஆட்டோ ஓட்டுநர்கள் விஜயகுமார், பிரதாப் ஆகியோர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.மாணவி கூச்சலிட்டதால், அவரை வீட்டில் இறக்கிவிட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரும் தப்பிச்சென்றுள்ளனர்.நடந்த விவரத்தை அறிந்த சிறுமியின் பெற்றோர் திருப்பரங்குன்றம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன் அடிப்படையில், ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்

Next Story

மேலும் செய்திகள்