தேர்தலுக்கான செலவின பார்வையாளர்கள் நியமனம் - சத்யபிரதா சாஹூ அறிவிப்பு

மக்களவை மற்றும் இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
தேர்தலுக்கான செலவின பார்வையாளர்கள் நியமனம் - சத்யபிரதா சாஹூ அறிவிப்பு
x
மக்களவை தொகுதிக்கு 2 செலவின பார்வையாளர்களும், இடைத்தேர்தல் தொகுதிக்கு  ஒரு செலவின பார்வையாளரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று முதல் செலவினப் பார்வையாளர்கள் தங்களது பணிகளை தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.மேலும் வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்டதாக 9 கோடியே 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படும் இலவச திட்டங்களை எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்பது குறித்த நிதி ஆதாரம் பற்றிய தகவல்கள் அறிக்கையில் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்த சத்யபிரதா சாகு,வரும் 26ம் தேதி முதல் பொதுப் பார்வையாளர்கள் தங்களது பணியை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்