பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா : நேர்த்திக்கடன் செலுத்தும் திரளான பக்தர்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா : நேர்த்திக்கடன் செலுத்தும் திரளான பக்தர்கள்
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. சிறப்பு பூஜைகள் செய்து கோயில் பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். அதைத் தொடர்ந்து வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இன்று மாலை வரை நடைபெறும் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்