காரில் இருந்த கைத்துப்பாக்கி பறிமுதல் : பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை தொண்டாமுத்தூரில் வாகன சோதனை நடத்திய போது, ராஜ்குமார் என்பவர் உரிய உரிமம் இல்லாத கைத்துப்பாக்கியை காரில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . அந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்து மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். துப்பாக்கி குறித்து ராஜ்குமாரிடம் போலீசார், மற்றும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story