25 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளை சீரமைக்கவில்லை - வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக எச்சரிக்கை
25 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளை சீரமைக்கவில்லை -  வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் உள்ள கீழகாலனி பகுதியில்,  கடந்த 25 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புகொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவலறிந்த கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. கோரிக்கைகளை நிறைவேற்ற தாமதித்தால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்