போடாத சாலைக்கு ரூ.25 லட்சத்தில் பணி - பேனரை பார்த்து அதிர்ந்த கிராம மக்கள்

வையம்பட்டி கிராமத்திற்கு, கடந்த 15 ஆண்டுகளாக சாலை வசதியில்லாமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
போடாத சாலைக்கு ரூ.25 லட்சத்தில் பணி - பேனரை பார்த்து அதிர்ந்த கிராம மக்கள்
x
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வையம்பட்டி கிராமத்திற்கு, கடந்த 15 ஆண்டுகளாக சாலை வசதியில்லாமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் வையம்பட்டி கிராமத்திற்கு 25 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துவங்கியதாக விளம்பரப் பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முறையாக சாலை அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்