பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் : புகார் அளித்ததால் பலாத்கார வீடியோ வெளியீடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் : புகார் அளித்ததால் பலாத்கார வீடியோ வெளியீடு
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடி பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை, அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன், மிரட்டி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சரவணன் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

இந்நிலையில் சரவணன், தான் மாணவியை ஆபாசமாக எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து கேரளா மாநிலம் கொட்டாரக்கரை பகுதியில் பதுங்கியிருந்த சரவணனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், இதுபோல் பல பள்ளி மாணவிகளை மிரட்டி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தாக ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து சரவணனின் செல்போனை பறிமுதல் செய்து தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்