வாகன சோதனையில் சிக்கிய ரூ.43.26 லட்சம்

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் ராமாதபுரம் மாவட்டம் முழுவதிலும் வாகன தனிக்கை தீவிரம் அடைந்துள்ளது.
வாகன சோதனையில் சிக்கிய ரூ.43.26 லட்சம்
x
சனிக்கிழமை மட்டும் 3 இடங்களில் வாகன சோதனையின் போது 28 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிங்கப்பூர், மலேசியா ரூபாய் நோட்டுகள் மற்றும் 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இந்திய பணம், 16 லேப்டாப்புகள், 160 கை கடிகாரம் என 43 லட்சத்து 26 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களை அதிகாரிகள்,  ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை பார்வையிட்ட  ஆட்சியர் வீரராகவ ராவ், வெளிநாட்டு பணம் இருப்பதால் சுங்கத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் வங்கிகளில் நடக்கும் பண பரிவர்த்தனைகளை கண்காணித்து வருவதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்