"விவசாயிகளுக்கு குரல் கொடுக்கும் கட்சிகளுக்கு ஆதரவு" - லெனின்

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்குவோம் என அறிவிக்கும் அரசியல் கட்சிக்கு ஆதரவு வழங்குவோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு குரல் கொடுக்கும் கட்சிகளுக்கு ஆதரவு - லெனின்
x
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பேரழிவிற்கு எதிரான பேரியக்கத் தலைவர் லெனின் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிராக திணிக்கப்படும் திட்டங்களை கைவிட வேண்டும் என்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி மரக்காணம் தொடங்கி புதுச்சேரி, நாகை, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம் வரை 11 மாவட்டங்களில் வரும் ஜுன் 12ம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாகவும் விவசாயிகள்  தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்