பொள்ளாச்சி சம்பவம் எதிரொலி - துப்பாக்கி உரிமம் கேட்கும் மாணவிகள்

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தின் எதிரொலியாக, தங்களின் பாதுகாப்புக்காக, இரண்டு மாணவிகள், துப்பாக்கி உரிமம் கேட்டு, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சி சம்பவம் எதிரொலி - துப்பாக்கி உரிமம் கேட்கும் மாணவிகள்
x
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தின் எதிரொலியாக, தங்களின் பாதுகாப்புக்காக, இரண்டு மாணவிகள், துப்பாக்கி உரிமம் கேட்டு, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தமிழ் இளம் மற்றும் பள்ளி மாணவி ஓவியா ஆகிய இருவரும் அந்த மனுவை அளித்துள்ளனர். யாரை பார்த்தாலும் நம்பிக்கை வருவதில்லை என்றும் பழகும் நபர்களைப் பார்த்தால் கூட திருநாவுக்கரசு சவுரிராஜன் போன்றவர்களைத்தான் எண்ணத் தோன்றுவதாகவும், எனவே தங்களையும் தங்களது உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கி உரிமம் வேண்டி விண்ணப்பித்துள்ளதாக அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்