ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5.60 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் சூரியகாந்த என்பவர் உரிய ஆவணங்களின்றி 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை, வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Next Story