"வாகன சோதனை-1,248 கிராம் நகைகள் பறிமுதல்"

"ரூ.41 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்"
வாகன சோதனை-1,248 கிராம் நகைகள் பறிமுதல்
x
நாகை மாவட்டம் சூரக்காடு பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையின் போது காரைக்கால் நோக்கி  சென்ற காரில் இருந்து ஆயிரத்து 248 கிராம் எடையுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட நகைகள் விற்பனை செய்வதற்காக காரைக்காலில் உள்ள நகைக்கடைக்கு கொண்டு செல்லப்படுவதாக காரில் இருந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததையடுத்து பறக்கும் படையினர் நகைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு 41 லட்ச ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்