பெண்ணை தாக்கி கவரிங் நகை என தெரியாமல் பறித்துச்சென்ற கொள்ளையர்கள்

சேலம் மாவட்டம், ஓமலூரில், இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை கீழே தள்ளி விட்டு கழுத்தில் அணிந்திருந்த செயினை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்
பெண்ணை தாக்கி கவரிங் நகை என தெரியாமல் பறித்துச்சென்ற கொள்ளையர்கள்
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும், அன்பழகனின் மனைவி ரேவதி, என்பவர் இரு சக்கர வாகனத்திலிருந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து, வந்த  கொள்ளையர்கள் ரேவதியின் மொபட்டை உதைத்து கீழே தள்ளியுள்ளனர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு வேகமாக பறந்து சென்றனர்.    மொபட்டுடன் கீழே  விழுந்ததால் தலையில் படுகாயமடைந்து  ரேவதி மயங்கி விழுந்தார்.  அந்த வழியாக வந்த பொதுமக்கள் மயக்கத்தில் கிடந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   ரேவதி அணிந்திருந்தது கவரிங் நகை என தெரியாமல், கொள்ளையர்கள் இவ்வளவு அட்டகாசம் செய்து பறித்துச்சென்றுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்