வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிப்பு - தொடரும் சிகிச்சை : நேரில் நலம் விசாரித்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிப்பு - தொடரும் சிகிச்சை : நேரில் நலம் விசாரித்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
x
நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். குழந்தைகள், மாணவர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 3 நாட்களாக  வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 75க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடம் நலம் விசாரித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை மருத்துவர்களோடு ஆலோசனை நடத்தி  நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.  

Next Story

மேலும் செய்திகள்