கடும் வெயிலில் தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் : தேர்வு மையங்களில் வெயிலில் காத்திருக்கும் அவலம்

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் தேர்வு நடத்தப்படுவதால் வெயிலில் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடும் வெயிலில் தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் : தேர்வு மையங்களில் வெயிலில் காத்திருக்கும் அவலம்
x
11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. பொதுத்தேர்வுகளை விரைவாக முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. கடும் வெயில் வாட்டி வதைக்கும் இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாட தேர்வுகள் பிற்பகலில் நடக்கிறது. இதனால் மாணவ, மாணவிகள் கொளுத்தும் வெயிலில் தேர்வு மையத்தில் காத்திருக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு பிற்பகலில் தேர்வு நடத்தாமல் காலையில் தேர்வுகளை நடத்த முன் வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்