கணவரிடம் இருந்து 2 குழந்தைகளை மீட்டுத்தர வேண்டும்

மகளிர் காவல்நிலையம் முன்பு மனைவி தீக்குளிக்க முயற்சி
கணவரிடம் இருந்து 2 குழந்தைகளை மீட்டுத்தர வேண்டும்
x
வேலூர் மாவட்டம் மாசாப்பேட்டையில் வசித்து வரும் ஆனந்த், நான்சி தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இரு ஆண் குழந்தைகளை கணவர் பிரித்து சென்று விட்டதாக கூறி, நான்சி ராணிப்பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த நான்சி காவல்நிலையத்திற்கு முன்பாக மண்ணென்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் அவரை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப்படுத்தினார்.  இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது

Next Story

மேலும் செய்திகள்