தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா - குடியரசு துணை தலைவர் பங்கேற்பு

இந்திய கல்வி நிறுவனங்களை முன்னுக்கு கொண்டு வரும் பொறுப்பு மாணவ-மாணவிகளின் கையில் உள்ளதாக குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.
தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா - குடியரசு துணை தலைவர் பங்கேற்பு
x
உலக அளவில் இந்திய கல்வி நிறுவனங்களை முன்னுக்கு கொண்டு வரும் பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் கையில் உள்ளதாக குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். கோவை, நீலாம்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அவர்,  சாதி, மத வேற்றுமையின்றி நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார். நாடு முழுவதும் இரண்டரை லட்சம் கிராமங்களுக்கு, இணைய தள சேவை வழங்கப்பட்டு உள்ளதாகவும் வெங்கைய்ய நாயுடு குறிப்பிட்டார்

Next Story

மேலும் செய்திகள்