500-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவமனையில் இடம் இல்லாமல் நோயாளிகள் அவதி
500-க்கும்  மேற்பட்டவர்களுக்கு  மருத்துவமனையில்  சிகிச்சை
x
நாகை  மாவட்டம், வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில்,   குழந்தைகள், பள்ளி  மாணவர்கள், பெரியவர்கள்  என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு  கடந்த இரண்டு  நாட்களாக வாந்தி மயக்கம் மற்றும்  வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதில், 500-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லாததால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கொள்ளிடம்  கூட்டு  குடிநீர் திட்டம் மூலம்  விநியோகிக்கப்பட்ட குடிநீரால்  இந்த பாதிப்பு  ஏற்பட்டதாக கூறப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்