காதல் திருமணம் செய்த மகள், மருமகனை கடத்த முயற்சி : பெண்ணின் தாய் உட்பட 7 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

கரூர் அருகே காதல் திருமணம் செய்த மகள் மற்றும் மருமகனை கடத்த முயன்ற பெண்ணின் தாய் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காதல் திருமணம் செய்த மகள், மருமகனை கடத்த முயற்சி  : பெண்ணின் தாய் உட்பட 7 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
கரூர் மாவட்டம், பிச்சம்பட்டியை சேர்ந்த சேதுராமனுக்கும், நிலக்கோட்டை சேர்ந்த சிவரஞ்சனிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் கடந்த கடந்தாண்டு அக்டோபர் 23ஆம் தேதி திண்டுக்கல்லில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்தை தொடர்ந்து அவர்கள் நான்கு மாதங்களாக வெவ்வேறு ஊர்களில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு பிச்சம்பட்டிக்கு இருவரும் வந்ததை அறிந்த, சிவரஞ்சனியின் தாயார் ஜோதிமணி அவரது தங்கை ஸ்ரீதேவி மற்றும் உறவினர்கள் என மொத்தம் 9 பேர் பிச்சம்பட்டி வந்துள்ளனர். சிவரஞ்சனியை ஜோதிமணி மற்றும் அவரது ஆட்கள் அடித்து இழுத்து காருக்குள் போட்டுக் கொண்டு நிலக்கோட்டை நோக்கி சென்றனர்.  இந்த பரபரப்பில் ஸ்ரீதேவியை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டனர். அங்கிருந்தவர்கள் ஸ்ரீதேவியை அடித்து உதைத்து மாயனூர் போலீசில் ஒப்படைத்தனர். சிவரஞ்சனியை கடத்திய வழக்கில், புகார் பதிவு செய்த போலீசார் சிவரஞ்சனியை மீட்டதுடன் ஜோதிமணி, ஸ்ரீதேவி, உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாகி உள்ள பாண்டி மற்றும் சண்முகத்தை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்