மருத்துவர்களிடம் ரூ.10 கோடி மோசடி : தலைமறைவாக இருந்தவர் கைது

சென்னையில் மருத்துவர்களிடம் 10 கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவான போலி மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.
மருத்துவர்களிடம் ரூ.10 கோடி மோசடி : தலைமறைவாக இருந்தவர் கைது
x
சென்னை பெரம்பூா் பகுதியில் வசிக்கும்  பிரகாஷ் என்பவர் பிஎஸ்சி வரை படித்துள்ளார். இவர், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தன்னை மருத்துவர் என கூறி, மகப்பேறு மருத்துவ துறை தலைவர் கங்காதரன், மருத்துவர் சத்தியமூர்த்தி ஆகியோரிடம் பழகியுள்ளார். மேலும், மயிலாப்பூரில் மருத்துவமனை கட்டி தருவதாகக் கூறி, அவர்களிடம் 10 கோடி ரூபாயை பெற்றுள்ளார். இதுபோல், 7க்கும் மேற்பட்ட மருத்துவர்களிடம் மருத்துவ உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று அவர் மோசடி செய்துள்ளார். இந்நிலையில்,  மருத்துவர் சத்தியமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில், பிரகாஷை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்