தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

காய், கனிகள் சீர்வரிசையுடன் செவிலியர் மாணவிகள் பேரணி
தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு
x
புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாதத்தினை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை தடுக்க எவ்வகையான காய், கனிகளை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பேரணியில் செவிலியர் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டனர். ஊட்டச்சத்துடைய காய் மற்றும் கனி வகைகளை சீர்வரிசை தட்டில் வைத்து பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்