வாகனசோதனை- ரூ.3.07 கோடி பறிமுதல்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் செலவீனத்தை கண்காணிக்க பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்பு நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாகனசோதனை- ரூ.3.07 கோடி பறிமுதல்
x
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் செலவீனத்தை கண்காணிக்க பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்பு நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில், 3 கோடியே 7 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படை மூலம் ஒரு கோடியே 19 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், கண்காணிப்பு நிலைக்குழு மூலம் ஒரு கோடியே 87 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்