மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

காங். ஆட்சிக்கு வந்தால் நிர்வாகத்தில் தமிழகத்திற்கு முக்கியத்துவம்
மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்
x
முன்னதாக, சென்னையில் தனியார் கல்லூரியில் நடந்த மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்றார்.அப்போது, ஊழல் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாக குறிப்பிட்டார்.ரபேல் ஒப்பந்தத்தில்,பிரதமர் அலுவலகம் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியதாக  குற்றம் சாட்டிய ராகுல், அனில் அம்பானி நிறுவனத்திற்கு ரபேல் ஒப்பந்தம் கொடுத்தது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.ஜி.எஸ்.டியால் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது எனவும்,காங்கிரஸ் கட்சி  ஆட்சிக்கு வந்தால் ஒரே வரி இருக்கும்.அதுவும் குறைந்த வரியாக இருக்கும் என்றார்.நிரவ் மோடியை பேசிவிட்டு, ராபர்ட் வதேரா பற்றி பேசாதது ஏன்? என கல்லூரி மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராகுல்,  விசாரணை என்பது அனைவரும் பொதுவானது என கூறினார்

Next Story

மேலும் செய்திகள்