காட்டு யானை வேட்டையாடப்பட்ட வழக்கு : 4 பேருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமுகை வனப்பகுதியில் காட்டுயானை வேட்டையாடப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து மேட்டுப்பாளையம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காட்டு யானை வேட்டையாடப்பட்ட வழக்கு : 4 பேருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை
x
சிறுமுகை வனப்பகுதியில் காட்டுயானை வேட்டையாடப்பட்ட  வழக்கில் 4 பேருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து மேட்டுப்பாளையம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஓடந்துறை
வனப்பகுதியில் தந்தத்திற்காக காட்டு யானை வேட்டையாடிதாக சென்ராயன், குபேந்திரன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான மேட்டுப்பாளையம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்னை விதித்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்