21 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் மனு

தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தக் கோரி தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
21 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் மனு
x
தமிழகத்தின் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளை தவிர 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு அறிவித்தார்.வழக்கு நிலுவையில் இருப்பதால்,குறிப்பிட்ட 3 தொகுதிகளில் தேர்தல் நடத்த இயலாது எனவும் அவர் விளக்கம் அளித்தார்.இதனிடையே, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 18 தொகுதிகளோடு திருப்பரங்குன்றம்,அரவக்குறிச்சி, ஒட்டபிடாரத்தில் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுதாரர் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தலைமை நீதிபதி முன்பு ஆஜராகி இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையீடு செய்தார்.இதைதொடர்ந்து, இந்த வழக்கை வரும் 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி அறிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்