ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட வெள்ளி பொருட்கள் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட  வெள்ளி பொருட்கள் பறிமுதல்
x
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள காளிப்பட்டி பகுதியில்  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சேலத்தில் இருந்து வந்த பேருந்தை சோதனை செய்தபோது, அதில் பாலாஜி என்பவர் 3 கிலோ வெள்ளிப் பொருட்களை எவ்வித ஆவணமும் இன்றி கொண்டு வந்தது தெரியவந்தது.வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் மற்றோரு பேருந்தில் 2 கிலோ 600 கிராம் வெள்ளி பொருட்களை எவ்வித ஆவணமும் இன்றி கொண்டு வந்த சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்பவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்