தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது

டெல்லியில் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
x
"பத்ம விருதுகள்" வழங்கும் விழா டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் ஏற்கனவே விருது அறிவிக்கப்பட்ட 112 பேரில் 58 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவர் பங்காரு அடிகளார், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், கண் அறுவை சிகிச்சை நிபுணர் ஆர்.வி.ரமணி, இசைக் கலைஞர் டிரம்ஸ் சிவமணி, நடிகர் பிரபுதேவா ஆகியோர் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணை  தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்