பா.ஜ.க. ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடைந்தன - மார்க்சிஸ்ட் கட்சியின் பிரகாஷ் காரத்
தனியாருக்கு உதவும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு நலிவடைய செய்ததாக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குற்றச்சாட்டியுள்ளார்.
தனியாருக்கு உதவும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு நலிவடைய செய்ததாக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குற்றச்சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிகள் இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு மோடி அரசு உதவி வருவதாக குறிப்பிட்டார். ஊழலற்ற ஆட்சியாக இருக்கும் என கூறிய மோடி, பாதுகாப்பு துறையில் எந்த அனுபவமும் இல்லாத அனில் அம்பானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக பிரகாஷ் காரத் குற்றம்சாட்டினார்.
Next Story