ஆந்திராவில் பைக் திருடிய தமிழகத்தை சேர்ந்தவர்கள் : 29 வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸ்

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே போலீசார் வாகன தணிக்கையின்போது தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் பைக் திருடிய தமிழகத்தை சேர்ந்தவர்கள் : 29 வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸ்
x
காளஹஸ்தியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்திற்கு தேவையான எந்த ஒரு ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. இதனையடுத்து,  அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், சித்தூரில் தங்கி பைக் திருடி, சென்னையில் வியாபாரம் செய்ததும் தெரியவந்தது.அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 29 பைக்கை பறிமுதல் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்