"கோடை காலத்தில் மின்வெட்டு இருக்காது" - அமைச்சர் தங்கமணி உறுதி

கோடைக் கால மின்தேவையை சமாளிக்க தமிழக மின்வாரியம் தயாராக உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கோடை காலத்தில் மின்வெட்டு இருக்காது - அமைச்சர் தங்கமணி உறுதி
x
கோடைக் கால மின்தேவையை சமாளிக்க தமிழக மின்வாரியம் தயாராக உள்ளதாக  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் அரசு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி வரும் காலங்களில் 16 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின் நுகர்வு இருந்தாலும், அதனை சமாளிக்கும் வகையில் மின் உற்பத்தி திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்தார். அதனால் கோடைக் காலத்திலும் மின்வெட்டு இருக்காது என்றும், தற்போது 2 ஆயிரத்து 500 மெகாவாட் அளவிற்கு சூரிய சக்தி மின் உற்பத்தி நடந்து வருவதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்