காரில் குட்கா கடத்த முயற்சி - 150 கிலோ குட்கா பறிமுதல்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் காரில் கடத்த முயன்ற 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் காரில் கடத்த முயன்ற 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கண்ணன் என்பவர் தனது மளிகைக் கடையில் வைத்து விற்பனை செய்ய 150 கிலோ குட்கா பான் மசாலா பொருட்களை காரில் கொண்டு சென்றார். இது குறித்து தகவல் அறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கண்ணன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ குட்கா பொருளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்
Next Story