போலீசார் தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு? - உடலை தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு

போலீசார் தாக்கியதால் இறந்து போன சிறுவனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
போலீசார் தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு? - உடலை தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு
x
போலீசார் தாக்கியதால் இறந்து போன சிறுவனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஜெயா என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமது மகனை திருட்டு வழக்கில் சிறைக்கு அழைத்து சென்ற போலீசார் அடித்து துன்புறுத்தியதாக மனுதாரர் ஜெயா புகார் தெரிவித்துள்ளார். இதனை கொலை வழக்காக பதிவு செய்து விசாரிக்க மதுரை மாநகர காவல்துறை ஆணையருக்கு, நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்