அரசு, வேம்பு மரங்களுக்கு திருமணம் - மழை வேண்டி நூதன வேண்டுதல்
சேலம் மாவட்டம் ஓமலூரில், மழை பெய்ய வேண்டி, அரச மரத்திற்கும் வேம்பு மரத்திற்கும் திருமணம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஓமலூரில், மழை பெய்ய வேண்டி, அரச மரத்திற்கும் வேம்பு மரத்திற்கும் திருமணம் நடைபெற்றது. ஓமலுர் அருகே உள்ள கருப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காட்டுர் என்ற இடத்தில் இந்த நூதன வழிபாடு நடத்தப்பட்டது. திருமண அழைப்பிதழ் அடித்து, அரச மரத்தை மணமகனாகவும், வேம்பு மரத்தை மணமகளாகவும் கருதி சீர்வரிசைகளுடன், கிராம மக்கள் திருமணத்தை நடத்தி வைத்தனர். திருமணத்தை தொடர்ந்து, விருந்து பரிமாறப்பட்டது
Next Story