திருமணம் செய்து தர மறுத்ததால் ஆத்திரம் - பெண்ணின் தாய் கத்தியால் குத்தி கொலை
பெண்ணை திருமணம் செய்து தர மறுத்த தாயை கொலை செய்த கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள மசூதி காலனியை சேர்ந்த கார் ஓட்டுநர் வினோத் என்பவருக்கும் நரசிங்கபுரத்தை சேர்ந்த ஜீவிதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வினோத்தின் நடவடிக்கை சரியில்லை என கூறி 2 மாதங்களுக்கு முன் ஜீவிதாவின் தாயார் ரேவதி திருமணத்தை நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் வினோத்திற்கும் ஜீவிதாவிற்கும் இடையே மீண்டும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து ஜீவிதாவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு ரேவதியிடம் வினோத் வலியுறுத்தியுள்ளார். அதற்கு ரேவதி மறுக்கவே ஆத்திரமடைந்த வினோத், நேற்று இரவு, தனது நண்பருடன் சேர்ந்து கத்தியால் ரேவதியை சரமாரியாக குத்தியதில், அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸார்
வினோத்தை கைது செய்துள்ளனர். தப்பியோடிய அவரது நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர்
Next Story