5 மணிக்கே மது விற்பனை - மதுக்கடை முன் பரபரப்பை ஏற்படுத்திய பெண்

அதிகாலையிலேயே கணவர் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிற்கு வந்து உறங்கியதால், ஆத்திரமடைந்த மனைவி, மது வழங்கிய டாஸ்மாக் கடை முன் தர்ணாவில் ஈடுபட்டார்
x
திருப்பூர் பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்த பெண் கவிதா. இவரின் கணவர், இன்று அதிகாலையிலே மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் வந்து போதையில் மயங்கியுள்ளார். 2 சிறு குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் தினமும் வேலைக்கு செல்லாமல் இருப்பது கவிதாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மது வழங்கிய டாஸ்மாக் கடைக்கு கத்தியுடன் வந்த கவிதா, அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கிருந்த ஆண்கள் அவரை சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்ப தொடங்கினர். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல், கவிதா தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். அதோடு கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை எதிர்த்து, அரசுக்கு பல கோரிக்கைகளையும் கவிதா முன்வைத்தார். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற‌ கவிதாவை போலீசார் அப்புறப்படுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்