ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு : செல்போன் டவர் மீது ஏறி போராட்டம்
சென்னை பூந்தமல்லி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி மிரட்டல் விடுத்தார்.
சென்னீர்குப்பம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறி 30 வீடுகளை தாசில்தார் புனிதவதி தலைமையிலான காவல்துறை மற்றும் வருவாய்துறையினர், ஜே.சி.பி இயந்திரங்களின் உதவியுடன் வீடுகளை இடிக்க வந்தனர். அப்போது ஒரு சிலர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஒரு இளைஞர் செல்போன் டவர் மீது ஏறி மிரட்டல் விடுத்தார். அப்போது திடீரென அந்த நபர் மயங்கி விழுந்ததையடுத்து,வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story